பராமரிப்பு பணி காரணமாக வரதராஜன்பேட்டை, மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்


பராமரிப்பு பணி காரணமாக வரதராஜன்பேட்டை, மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 28 Oct 2018 10:15 PM GMT (Updated: 28 Oct 2018 5:23 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக வரதராஜன்பேட்டை, மீன்சுருட்டி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஓலையூர், பாப்பாகுடி ஆகிய துணை மின்நிலையங்களின் உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆண்டிமடம் துணை மின்நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, இங்கிருந்து மின் வினியோகம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.

இதேபோல் ஓலையூர் துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், ஓலையூர், விழுதுடையான், பெரியாத்துகுறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.

இதேபோல் பாப்பாகுடி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், வேம்புக்குடி, அழகர்கோவில், சலுப்பை, வெத்தியார்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக்கொல்லை, ஜெ.குறுக்குரோடு, தழுதாழைமேடு, வளவநேரி, வங்குடி, இறவாங்குடி, ஏ.என்.பேட்டை, த்ிருக்களப்பூர், கோவில்வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story