விழுப்புரம் அருகே: காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு - தொழிலாளி கைது


விழுப்புரம் அருகே: காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு - தொழிலாளி கைது
x
தினத்தந்தி 1 Nov 2018 9:30 PM GMT (Updated: 1 Nov 2018 4:46 PM GMT)

விழுப்புரம் அருகே காதலியுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள ஆ.கூடலூரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பாலாஜி (வயது 27), தொழிலாளி. இவருக்கும், காணை பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, தங்களது காதலை வளர்த்து வந்தனர். அந்த சமயத்தில் திருமணம் செய்து கொள்வதாக பாலாஜி ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த இளம்பெண், பாலாஜியிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டார். அதற்கு திருமணம் செய்து கொள்ள பாலாஜி மறுத்து விட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர்.

Next Story