மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது பெண்கள் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு


மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது பெண்கள் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Nov 2018 10:15 PM GMT (Updated: 5 Nov 2018 7:18 PM GMT)

மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே திருமங்கலம் ஆர்ச் அருகில் பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் வினோத் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

கைது

மயிலாடுதுறை அருகே காருகுடியில் பெரம்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்திய குத்தாலம் அருகே அசிக்காடு பெரிய தெருவை சேர்ந்த வீராசாமி மகன் முத்துராமன் (35) என்பவரை கைது செய்தனர். இதேபோல சாராயம் கடத்தி வந்த அசிக்காடு காவிரி தெருவை சேர்ந்த காசிநாதன் மகன் பாரதிராஜா (24) என்பவரையும், கொங்கானோடையில் நண்டலாற்று பாலம் அருகே சாராயம் கடத்திய திருவாரூர் மாவட்டம் கீரனூர்-வாளூர் கிராமத்தை சேர்ந்த ராஜா (48) என்பவரையும் பெரம்பூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story