சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 9 Nov 2018 9:00 PM GMT (Updated: 9 Nov 2018 7:47 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சமையல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சென்னை,

சென்னை ஆலப்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கணேசன் (வயது 52), சமையல் தொழிலாளி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அசோக்நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் மாநகர குற்றவியல் அரசு வக்கீல் கவுரி அசோகன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, குற்றம்சாட்டப்பட்ட கணேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Next Story