திருச்செந்தூரில் வங்கி கிளார்க் பதவிக்கான எழுத்துதேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது


திருச்செந்தூரில் வங்கி கிளார்க் பதவிக்கான எழுத்துதேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் சிவந்தி அகாடமி நடத்துகிறது
x
தினத்தந்தி 10 Nov 2018 9:30 PM GMT (Updated: 10 Nov 2018 6:33 PM GMT)

திருச்செந்தூரில் ஐ.பீ.பி.எஸ். நடத்தும் வங்கி கிளார்க் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை சிவந்தி அகாடமி நடத்துகிறது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் ஐ.பீ.பி.எஸ். நடத்தும் வங்கி கிளார்க் பதவிக்கான எழுத்து தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை சிவந்தி அகாடமி நடத்துகிறது.

வங்கி கிளார்க் பதவி

இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பீ.பி.எஸ்.) நடத்தும் வங்கி கிளார்க் பதவிக்கான எழுத்துத் தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த தேர்வு பற்றிய விவரங்களை www.ibps என்ற இணையதளத்தின் வழியாக அறிந்து கொள்ளலாம். இந்த தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் 10.10.2018-க்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். வங்கி எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்களும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.

பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

பயிற்சி வகுப்புகள்

இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.3 ஆயிரத்து 500 ஆகும்.

வங்கி எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுனர்களால் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்புகள் நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது. சிவந்தி அகாடமியில் பயிற்சி பெற்று பலர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கும் வசதி

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதி வசதி மற்றும் உணவுக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல்நாளான வருகிற 15-ந் தேதி நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர...

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உள்ள சிவந்தி அகாடமியில் வருகிற 15-ந் தேதி காலை 9 மணிக்கு ரூ.3 ஆயிரத்து 500-ஐ நேரில் செலுத்தி பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்படமாட்டாது.

மேற்கண்ட தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04639-242998, அலைபேசி எண் 9442055243, 8682985148.

Next Story