நெல்லை அருகே தொழிலாளி கொலை வழக்கில் பெண் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு


நெல்லை அருகே தொழிலாளி கொலை வழக்கில் பெண் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 11 Nov 2018 9:30 PM GMT (Updated: 11 Nov 2018 7:05 PM GMT)

நெல்லை அருகே தொழிலாளி கொலை வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பேட்டை,

நெல்லை அருகே தொழிலாளி கொலை வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி கொலை

நெல்லை டவுன் அருகே உள்ள சொக்கட்டான்தோப்பு ஊரைச் சேர்ந்தவர் தங்க பாண்டி (வயது 60). கட்டிட தொழிலாளி. இவருக்கும், அவருடைய நண்பரான சேதுராயன்புதூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகன் (38) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது. இந்த பிரச்சினையில் தங்கபாண்டியை முருகன் அரிவாளால் வெட்டி கொலை செய்து, மானூர் அருகே உள்ள கம்மாங்குளம் சுடுகாட்டு பகுதியில் உடலை புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் முருகனை கைது செய்த போலீசார், தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பணத்தையும் கைப்பற்றினர்.

பின்னர் நேற்று முன்தினம் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு முருகனை சுத்தமல்லி போலீசார் அழைத்து சென்றனர். அங்கு தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் போலீசார் அவருடைய உடலை தோண்டி எடுத்தனர். தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் உடலை அங்கேயே பரிசோதனை செய்தனர். இதையடுத்து உடல் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெண் கைது

தொடர்ந்து சுத்தமல்லி போலீசார் இந்த கொலை தொடர்பாக முருகனிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் தங்கபாண்டி கொலை வழக்கில் முருகன் மனைவி ஈஸ்வரி (35) மற்றும் முருகனின் தம்பி பால்துரை உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஈஸ்வரியை கைது செய்தனர்.

மேலும் தப்பியோடிய பால்துரையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story