மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி சப்–இன்ஸ்பெக்டர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி சப்–இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 11 Nov 2018 10:15 PM GMT (Updated: 11 Nov 2018 7:55 PM GMT)

மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி சப்–இன்ஸ்பெக்டர் பலியானார்.

நாகமலைபுதுக்கோட்டை,

மதுரையை அடுத்த நாகமலைபுதுக்கோட்டை சின்னக்கண்ணுநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). இவர் மதுரை திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் பணி முடித்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். நாகமலைபுதுக்கோட்டை சீனிவாசகாலனி அருகே அவர் வந்தபோது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

இந்த விபத்து குறித்து நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story