அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு


அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2018 9:45 PM GMT (Updated: 14 Nov 2018 11:50 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

அம்மா திட்ட முகாம்

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் அம்மா திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அந்தந்த தாசில்தார் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

கிராமங்கள்

முகாம் தூத்துக்குடி தாலுகா மீளவிட்டான் பகுதி–2, ஸ்ரீவைகுண்டம் தாலுகா பத்மநாபமங்கலத்திலும், திருச்செந்தூர் தாலுகா சுகந்தலையிலும், சாத்தான்குளம் தாலுகா சாஸ்தாவிநல்லூரிலும், கோவில்பட்டி தாலுகா கங்கன்குளம்–இனாம் மணியாச்சியிலும், விளாத்திகுளம் தாலுகா ராமச்சந்திராபுரத்திலும், எட்டயபுரம் தாலுகா மேலஈராலிலும், ஓட்டப்பிடாரம் தாலுகா வெங்கடேசுவரபுரத்திலும், கயத்தார் தாலுகா வடக்கு வண்டானத்திலும், ஏரல் தாலுகா ஆதிநாதபுரத்திலும் நடக்கிறது.

இந்த முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.

எனவே பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story