திண்டிவனத்தில்: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


திண்டிவனத்தில்: மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 8:16 PM GMT)

திண்டிவனத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஏவலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் அய்யப்பன் (வயது 26). இவர் திண்டிவனம் சேடன்குட்டை தெருவில் தங்கியிருந்து, அதே பகுதியில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.

அப்போது ஒர்க்‌ஷாப்பின் சுவர் மழையில் நனைந்திருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே அய்யப்பன், மின்விளக்கை போடுவதற்காக ‘சுவிட்சை’ அழுத்தினார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான அய்யப்பன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story