விருத்தாசலம் அருகே: டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி


விருத்தாசலம் அருகே: டெங்கு காய்ச்சலுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 21 Nov 2018 10:30 PM GMT (Updated: 21 Nov 2018 8:16 PM GMT)

விருத்தாசலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலியானார்.

கம்மாபுரம், 


விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மனைவி வளர்மதி(வயது 45). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை, உறவினர்கள் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. தொடர்ந்து அவரது ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து பார்த்த போது, அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, இதற்கான சிகிச்சையை வளர்மதிக்கு டாக்டர் அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் இருக்கின்றனர்.

இதற்கிடையே, முதனை கிராமத்தில் தற்போது மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த கிராமத்தை சேர்ந்த நித்யா, வித்யா, தமிழ்மணி உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கிராம மக்கள் தற்போது அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் அரசு இந்த கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தி, காய்ச்சல் பரவுவதை தடுப்பதுடன், மக்களின் அச்சத்தை போக்கிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story