நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி 200 பேர் பங்கேற்பு


நாமக்கல்லில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி 200 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Nov 2018 10:30 PM GMT (Updated: 22 Nov 2018 7:10 PM GMT)

நாமக்கல்லில் நேற்று அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

நாமக்கல், 

அரசு அலுவலர்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடத்தப்பட்டது. இதையொட்டி ஆண்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

இதேபோல் பெண்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் குண்டு எறிதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் கபடி, கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டது.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 200 அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து போட்டியும், டென்னிஸ் மற்றும் இறகுப்பந்து போட்டிகள் நாமக்கல் ஆபீசர்ஸ் கிளப்பிலும், மேசைப்பந்து போட்டி விக்டோரியா ஹாலிலும் நடைபெற இருப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

Next Story