குடும்பத்தகராறு: தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை


குடும்பத்தகராறு: தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2018 10:00 PM GMT (Updated: 28 Nov 2018 8:48 PM GMT)

திண்டிவனம் அருகே குடும்ப தகராறு காரணமாக தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள வடசிறுவளூர் நாகாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சடையப்பன் மகன் புருஷோத்தமன்(வயது 29), தொழிலாளி. இவருக்கும் சவிதா(20) என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சவிதா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் புருஷோத்தமன் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த புருஷோத்தமன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் தீக்காயமடைந்து வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புருஷோத்தமன் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story