சேலம் திருவாக்கவுண்டனூரில் ஓடையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


சேலம் திருவாக்கவுண்டனூரில் ஓடையில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Nov 2018 10:15 PM GMT (Updated: 30 Nov 2018 6:47 PM GMT)

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் உள்ள ஓடையில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரமங்கலம், 

சேலம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் மயானம் உள்ளது. இங்குள்ள ஓடையில் நேற்று 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுபற்றி சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் பெயர் என்ன? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் ஏதும் உடனடியாக தெரியவில்லை.

வாலிபரின் உடல் மீட்கப்பட்ட ஓடையில் தண்ணீரும், சாக்கடை கழிவுநீரும் கலந்து ஓடுகிறது. இதனால் மது அருந்திவிட்டு போதையில் அவர் தடுமாறி ஓடையில் விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்துவிட்டு அவரது உடலை ஓடையில் வீசிவிட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், வாலிபரின் உடல் பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய உண்மை தெரியவரும் என்று சூரமங்கலம் போலீசார் தெரிவிக்கின்றனர். ஓடையில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் திருவாக்கவுண்டனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story