ஓசூரில் லிப்ட்டில் அடிபட்டு தொழிலாளி சாவு பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்


ஓசூரில் லிப்ட்டில் அடிபட்டு தொழிலாளி சாவு பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:15 PM GMT (Updated: 1 Dec 2018 4:29 PM GMT)

ஓசூரில் லிப்ட்டில் அடிபட்டு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஓசூர்,

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் போதன்குமார் (வயது 21). இவர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே உள்ள பல்லூரில் தங்கி ஓசூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அவர் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் இந்திரன் (54) என்பவர் லிப்ட்டை இயக்கி வந்தார்.

இதில் லிப்ட்டின் அதிக பாரம் கொண்ட இரும்பு தகடு போதன்குமாரை தாக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். போதன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.


இது குறித்து சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த போதன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story