தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 7 Dec 2018 9:30 PM GMT (Updated: 7 Dec 2018 7:36 PM GMT)

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ராஜூவ் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய 2-வது மகன் கிளின்டன் டேனியல் (வயது 19). இவர் ஐ.டி.ஐ. முடித்து விட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் தனது அண்ணன் ஐசக் ராஜா நடத்தி வந்த வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் பணியாற்றினார். பின்னர் அங்கு வேலை சரிவர இல்லாததால் அபிராமி நகரில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் தொழிலாளியாக பணிக்கு சேர்ந்தார்.

அந்த வெல்டிங் ஒர்க்‌ஷாப் மூலம் முத்தையாபுரம் சுந்தர்ராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கூலிங் ஷீட் அமைக்கும் பணி நேற்று காலையில் நடந்தது. இந்த பணியில் அவரும் ஈடுபட்டு இருந்தார்.

மின்சாரம் தாக்கி...

அப்போது இரும்பு குழாய் ஒன்றை அவர் தூக்கி சென்றார். அப்போது மேலே சென்ற மின்கம்பியில் பட்டு அந்த குழாய் உரசியதில், அதன் வழியாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி கிடந்தார். சக தொழிலாளர்கள் அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள், சக தொழிலாளர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story