வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 10 Dec 2018 10:45 PM GMT (Updated: 10 Dec 2018 4:34 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகொந்தம் கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சித்திரசேகரன் (வயது 34). தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு அதிக கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த சித்திரசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரிகை அருகே உள்ள குடிசாதனப்பள்ளியை சேர்ந்தவர் அருண் (22). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அருண் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story