சேலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த டியூசன் ஆசிரியை பெற்றோரிடம் ஒப்படைப்பு


சேலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த டியூசன் ஆசிரியை பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 18 Dec 2018 11:09 PM GMT (Updated: 18 Dec 2018 11:09 PM GMT)

சேலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த டியூசன் ஆசிரியையை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சூரமங்கலம்,

சேலத்தை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், ஒரு தனியார் டியூசன் மையத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பாகல்பட்டியை சேர்ந்தவருக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருமணம் முடிந்த சில நாட்களில் மனைவியை தனது பெற்றோரிடம் விட்டு விட்டு, சென்னைக்கு சென்று விட்டார். கணவர் வீட்டில் இருந்த ஆசிரியை சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த 14-ந்தேதி தனது பெற்றோரிடம் வெளியில் சென்று வருவதாக கூறி சென்றவர் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாயமான மகளை கண்டுபிடித்து தரும்படி அவரது தந்தை சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் 18 வயது உடைய கட்டிட தொழிலாளியான காதலனுடன் ஆசிரியை சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தார். இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி ஆசிரியையை அவரது பெற்றோரிடமும், கட்டிட தொழிலாளியை அவரது பெற்றோரிடம் தகுந்த அறிவுரை கூறி போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ஆசிரியைக்கும், அவரது வீட்டு பகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய கட்டிட தொழிலாளிக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் இருவரும் காதலித்தனர். இதனால் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் மகளை கண்டித்தனர். பின்னர் காதலை கைவிட மகளிடம் கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்து, செல்போனில் காதலனுடன் பேசிக்கொண்டே இருந்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆசிரியைக்கு அவரது பெற்றோர் வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில் கட்டிட தொழிலாளியுடன் திருமணம் செய்து கொண்டால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று மகளிடம் கூறி மிரட்டினர். இதனால் திருமணத்திற்கு சம்மதித்து உள்ளார். இதைத்தொடர்ந்து ஆசிரியைக்கும், பாகல்பட்டியை சேர்ந்தவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பின்னர் கணவர் சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ஆசிரியை காதலனுடன் சென்றது தெரிய வந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story