உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி மர்ம சாவு - போலீசார் விசாரணை


உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி மர்ம சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 25 Dec 2018 10:15 PM GMT (Updated: 25 Dec 2018 6:18 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பழைய நன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் முருகன்(வயது 35). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 மகள், 1 மகன் உள்ளனர். நேற்று முன்தினம் முருகன் உளுந்தூர்பேட்டை சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முருகனை தேடிபார்த்தனர். அப்போது ஆசனூர் ஏரிக்கரை அருகே முருகன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முருகனை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தனலட்சுமி உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த முருகன் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story