பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு ரூ.125¼ கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கலெக்டர் வழங்கினார்


பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு ரூ.125¼ கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 31 Dec 2018 10:45 PM GMT (Updated: 31 Dec 2018 7:19 PM GMT)

பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ஐ முன்னிட்டு முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கம் பெரம்பலூரில் நேற்று நடந்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ஐ முன்னிட்டு முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன்(குன்னம்), தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கலெக்டர் சாந்தா தலைமையில் 99 தொழில் முனைவோருக்கு ரூ.125 கோடியே 30 லட்சத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இதையடுத்து தொழில் முனைவோருக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கலெக்டர் சாந்தா வழங்கினார். அப்போ அவர் பேசுகையில், கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் நிதி ஆண்டில் இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாநில முதலீட்டு மானிய திட்டத்தில் 31 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.107 கோடியே 77 லட்சம் மானியமாகவும், குறைந்த அழுத்த மின் மானியத் திட்டத்தில் 23 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 கோடியே 17 லட்சம் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பெரம்பலூர் மாவட்டம் பால் உற்பத்தி, சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோள உற்பத்தி போன்றவற்றில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து வருகிறது. எனவே புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் மேற்கண்ட பொருட்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு, ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளில் உள்ள தொழில் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பெரம்பலூர் கிளை மேலாளர் ரவீந்திரன், சிட்கோ கிளை மேலாளர் அனிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள், உதவி பொறியாளர் (தொழில்) சரவணன் ஆகியோர் பேசினர். முன்னதாக தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் (ரசாயனம்) முருகன் வரவேற்றார். முடிவில் மேலாளர் (கிராம தொழில் நிர்வாகம்) கஸ்தூரி நன்றி கூறினார். 

Next Story