அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:45 PM GMT (Updated: 4 Jan 2019 11:51 PM GMT)

அரியலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர், 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசு ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியம் தொகுப்பில் இருந்து ஊதியம் வழங்க வேண்டும். பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி அரசு பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்து அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று அரியலூரில் உள்ள நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவக்குமார் சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சாலை பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் கோதண்டபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். 

Next Story