போலி ஆவணங்கள் மூலம் பெல்ஜியம் சென்ற இலங்கை அகதி கைது சென்னை ஏஜெண்டுக்கு வலைவீச்சு


போலி ஆவணங்கள் மூலம் பெல்ஜியம் சென்ற இலங்கை அகதி கைது சென்னை ஏஜெண்டுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Jan 2019 10:34 PM GMT (Updated: 7 Jan 2019 10:34 PM GMT)

போலி ஆவணங்கள் மூலம் பெல்ஜியம் சென்ற இலங்கை அகதி கைது செய்யப்பட்டார். மேலும் அவரை போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பிய சென்னை ஏஜெண்டை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை, 

மும்பையில் இருந்து பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சுக்கு சம்பவத்தன்று விமானம் ஒன்று சென்றது. இதில், முத்துகிருஷ்ணன் பெருமாள்(வயது41) என்ற பெயரில் சென்ற பயணியின் ஆவணங்களை பெல்ஜியம் விமான நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவா் போலி ஆவணங்கள் மூலம் அங்கு சென்றது தெரியவந்தது.

முத்துகிருஷ்ணன் பெருமாளின் உண்மையான பெயர் கிருபாகரன் கணேசன். அவரிடம் இலங்கை ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் மற்றும் இந்திய ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இலங்கை அகதி கைது

இலங்கை அகதியான கிருபாகரன் சென்னையில் அண்டன் என்ற ஏஜெண்டை சந்தித்து உள்ளார். அவர் ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு போலி ஆவணங்கள் மூலம் கிருபாகரனை, முத்துகிருஷ்ணன் பெருமாள் என்ற பெயரில் பெல்ஜியத்துக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து பெல்ஜியம் அதிகாரிகள் அவரை மும்பைக்கு திருப்பி அனுப்பினர்.

மும்பை வந்த அவரை சகார் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை போலி ஆவணங்கள் மூலம் பெல்ஜியம் அனுப்பிய ஏஜெண்டு அண்டனை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story