திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ரெயில்வே போலீஸ் எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்பு 23-ந் தேதி தொடங்குகிறது


திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் ரெயில்வே போலீஸ் எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்பு 23-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 10 Jan 2019 10:30 PM GMT (Updated: 10 Jan 2019 7:15 PM GMT)

ரெயில்வே போலீஸ் எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

திருச்செந்தூர், 

ரெயில்வே துறை நடத்தும் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான எழுத்து தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) மற்றும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு www.in-d-i-a-n-r-a-i-lw-ays.gov.in என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 25 வயதுக்கு மிகாதவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.

இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. வருகிற 23-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்பு நடைபெறும்போது எக்காரணம் கொண்டும் கண்டிப்பாக வெளியில் செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது. பயிற்சி கட்டணம் ரூ.3,500 ஆகும்.

பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதி மற்றும் உணவுக்கான கட்டணம் ரூ.3000-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 23-ந் தேதி அன்று நேரில் செலுத்த வேண்டும்.

பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் ஒரு வெள்ளைத்தாளில் தங்களுடைய புகைப்படம் ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.3,500-க் கான டிமாண்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628 216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 12-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பயிற்சிக்கான கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்படமாட்டாது.

இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். தொலைபேசி எண்: 04639- 242998. அலைபேசி எண்: 9442055243, 8682985148.

Next Story