பரமக்குடி தொகுதியில் டி.டி.வி.தினகரன் 2 நாட்கள் சுற்றுப்பயணம்


பரமக்குடி தொகுதியில் டி.டி.வி.தினகரன் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:15 PM GMT (Updated: 11 Jan 2019 10:40 PM GMT)

பரமக்குடி தொகுதியில் அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பரமக்குடி,

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வருகிற 20 மற்றும் 21–ந்தேதிகளில் சுற்றுப்பயணம் செய்து தொகுதி மக்களை நேரில் சந்திக்கிறார். அப்போது பல ஊர்களில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். மேலும் 30 இடங்களில் பொதுமக்களை சந்தித்து பேச உள்ளார். மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் அ.ம.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு சமுதாய முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச உள்ளார். இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதனையொட்டி அவருக்கு வழங்கப்படும் வரவேற்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ராஜாராம் பாண்டியன், சிவக்குமார், முத்துராமலிங்கம், குமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் முத்தையா ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

இதில் தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுக கனி, இளைஞரணி செயலாளர் நாகராஜ், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் மாரிச்செல்வம், மாவட்ட மாணவரணி செயலாளர் விசுவநாதன், பரமக்குடி நகர் பேரவை செயலாளர் கலைவாணன், மாணவரணி செயலாளர் கார்டன் சரவணன், போகலூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜசெல்வி குருந்தையா, சங்கீதா பழனிச்சாமி, பேரவை செயலாளர் ராமமூர்த்தி, மகளிரணி நிர்வாகிகள் ரேணுகாதேவி, திலகா, காளீசுவரி, ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story