குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 13 Jan 2019 11:00 PM GMT (Updated: 13 Jan 2019 3:43 PM GMT)

மத்திகிரியில் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

மத்திகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி எஸ்.எம். நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி நளினி (வயது 27). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நளினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் அங்கு சென்று நளினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் நளினி இறந்துள்ளதால் அவரது தற்கொலை தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் விமல் ராஜூம் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story