திருக்கோவிலூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை தாய் திட்டியதால் விபரீத முடிவு


திருக்கோவிலூர் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை தாய் திட்டியதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 13 Jan 2019 10:30 PM GMT (Updated: 13 Jan 2019 5:35 PM GMT)

திருக்கோவிலூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகள் ஜீவிதா (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜீவிதாவிடம், அவருடைய தாய் காந்தி ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

ஆனால் ஜீவிதா ரேஷன் கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவருடைய தாய், ரேஷன் பொருட்கள் வாங்க செல்லாமல் வீட்டில் இருக்கிறாய்? என ஜீவிதாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜீவிதா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயக்கமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஜீவிதா உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story