புதிதாக தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


புதிதாக தொடங்கப்படும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 14 Jan 2019 11:00 PM GMT (Updated: 14 Jan 2019 6:50 PM GMT)

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடத்தூர்,

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்கள் நியமனம் இல்லை. பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பொதுத்தேர்வு நெருங்கி வரும் நேரத்தில் வருகிற 21–ந் தேதி முதல் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.

ஆசிரியர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டுமே தவிர, கோரிக்கை உள்ளது என்பதற்காக சில நேரங்களில் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்கள் எத்தனை நாள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்களோ? அத்தனை நாட்களிலும் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். அரசுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தால், இதுகுறித்து பேசப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.


Next Story