102-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு


102-வது பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 18 Jan 2019 12:11 AM GMT (Updated: 18 Jan 2019 12:11 AM GMT)

எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்த நாளையொட்டி தஞ்சையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தஞ்சை ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி தஞ்சை தெற்கு மாவட்டம், மாநகரம், ஒன்றிய பகுதி அ.தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் உள்ள சாந்தி- கமலா தியேட்டர் அருகே இருந்து புறப்பட்டது.

ஊர்வலத்துக்கு பரசுராமன் எம்.பி. தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வள தலைவர் காந்தி, மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், காவேரி சிறப்பங்காடி தலைவர் பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலம் சுற்றுலா மாளிகை, புதுஆற்றுப்பாலம், தஞ்சை தலைமை தபால் நிலையம் வழியாக ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட முன்னாள் துணைச்செயலாளர் ஜே.வி.கோபால், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலை.ரவி, கரந்தை திராவிட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பஞ்சாபிகேசன், பேரூராட்சி முன்னாள் தலைவர் சிங்.ஜெகதீசன், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மணிகண்டன், முன்னாள் உறுப்பினர்கள் சண்முகபிரபு, என்.கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story