திருச்சிற்றம்பலம் அருகே பரிதாபம்: தூக்குப்போட்டு 7 மாத கர்ப்பிணி தற்கொலை


திருச்சிற்றம்பலம் அருகே பரிதாபம்: தூக்குப்போட்டு 7 மாத கர்ப்பிணி தற்கொலை
x
தினத்தந்தி 29 Jan 2019 10:15 PM GMT (Updated: 29 Jan 2019 7:36 PM GMT)

திருச்சிற்றம்பலம் அருகே தூக்குப்போட்டு 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது47). விவசாயி. இவருடைய மகள் செல்வி (24). இவருக்கும் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள வழுதலைவட்டம் உடையார் தெருவை சேர்ந்த ஆனந்தராஜ் (28) என்பவருக்கும் கடந்த ஆண்டு (2018) திருமணம் நடைபெற்றது. செல்வி, 7-மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் அவருடைய கணவர் ஆனந்தராஜ் தினமும் மது குடித்து விட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் செல்வி மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் செல்வி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக செல்வியின் தந்தை கணேசன், திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

7 மாத கர்ப்பிணி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story