கீரனூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கீரனூர்,
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள ஒத்தக்கடை மேலப்புதுவயலை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45). அ.தி.மு.க. பிரமுகரான இவர், அமைச்சர் விஜயபாஸ்கரின் தீவிர ஆதரவாளர். இவர் வடக்கு ரதவீதியில் காய்கறிகள், பழங்கள் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் வியாபாரத்திற்கு வாங்குவதற்காக வழக்கம் போல் நேற்று அதிகாலை திருச்சி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி, பழங்களை வாங்கினார். பின்னர் வாங்கிய காய்கறி, பழங்களை கடையில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அதனை எடுக்க விஜயபாஸ்கர் நீண்ட நேரமாகியும் கடைக்கு வரவில்லை.
இதையடுத்து கடைக்காரர்கள் விஜயபாஸ்கர் செல்போனுக்கு தொடர்பு கொண்டும், அவர் எடுக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்து கடையில் வேலை பார்ப்பவர்கள், அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் விஜயபாஸ்கர் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயபாஸ்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விஜயபாஸ்கர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயபாஸ்கருக்கு, மகாலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகர்கோவில் அருகே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்ள போவதாக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி விட்டு, தபால் ஊழியர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் மிரட்டியதால் தற்கொலை செய்ததாக கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பா.ம.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கும்பகோணம் பகுதியில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. மேலும் கண்டன ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஊர்வலம் சென்ற 7 பெண்கள் உள்பட 140 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனம் பா.ம.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மயிலாடுதுறையில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற இந்து அமைப்பினர் 105 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.