பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 9:45 PM GMT (Updated: 11 Feb 2019 8:30 PM GMT)

பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் தேன்கனிக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். கடந்த 31.5.2015 அன்று மாணவி தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அந்த நேரம் ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 29) என்பவர் அங்கு வந்து மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து மாணவியின் உறவினர்கள் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கவுதமை கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட கவுதமுக்கு மாணவியை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கவுதமை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.

Next Story