வேக தடுப்பு கம்பியில் மோதியதால் பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற சப்–கலெக்டர் மகன் பலி


வேக தடுப்பு கம்பியில் மோதியதால் பரிதாபம்: மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வுபெற்ற சப்–கலெக்டர் மகன் பலி
x
தினத்தந்தி 11 Feb 2019 11:30 PM GMT (Updated: 11 Feb 2019 11:13 PM GMT)

சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த சப்–கலெக்டர் மகன் வேக தடுப்பு கம்பியில் மோதி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

சோழவந்தான்,

மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் அன்புநாதன். சப்–கலெக்டராக விருதுநகரில் பணிபுரிந்து 2 மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்றார். தற்போது பவானிசாகர் அரசு பயிற்சி பள்ளியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மகன் வெற்றியரசன் (வயது 30). வியாபாரம் செய்து வந்தார். இவர், தனது நண்பர் அருண் என்பவருடன் திண்டுக்கல்லில் உறவினர் வீட்டு திருமண விழாவிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் நண்பருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது சோழவந்தான் அருகே நகரி கிராமத்தில் நான்குவழிச்சாலையில் வந்தபோது வேக தடுப்பு கம்பியில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து வெற்றியரசன், அருண் ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த வெற்றியரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த அருண் மதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story