அம்மா திட்ட முகாம் நாளை மறுநாள் நடக்கிறது


அம்மா திட்ட முகாம் நாளை மறுநாள் நடக்கிறது
x
தினத்தந்தி 12 Feb 2019 9:30 PM GMT (Updated: 12 Feb 2019 8:19 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

அம்மா திட்ட முகாம்

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நெல்லை தாலுகா-ராமலிங்கனேரி, ராதாபுரம்-கருங்குளம், அம்பை-பள்ளக்கால், நாங்குநேரி-கூந்தன்குளம், சேரன்மாதேவி-வடக்கு காருக்குறிச்சி, பாளையங்கோட்டை- பாளையங்கோட்டை பகுதி 1, சங்கரன்கோவில்-நரிக்குடி, திருவேங்கடம்-களப்பாளன்குளம் ஆகிய கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது.

மனுக்கள்

முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு- இறப்பு சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ் மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் முகாமில் மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story