சிறுமியை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் ஏற்கனவே 5 வழக்குகளில் தண்டனை பெற்றவர்


சிறுமியை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் ஏற்கனவே 5 வழக்குகளில் தண்டனை பெற்றவர்
x
தினத்தந்தி 12 Feb 2019 11:30 PM GMT (Updated: 12 Feb 2019 10:21 PM GMT)

சிறுமியை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இவர் ஏற்கனவே 5 வழக்குகளில் தண்டனை பெற்றவர் ஆவார்.

மும்பை, 

சிறுமியை கற்பழித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இவர் ஏற்கனவே 5 வழக்குகளில் தண்டனை பெற்றவர் ஆவார்.

சிறுமி கற்பழிப்பு

மும்பை வக்கோலாவை சேர்ந்த 8 வயது சிறுமியிடம் கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஆயாஸ் அன்சாரி என்பவர் விளையாட்டு பொருட்கள் தருவதாக கூறி, தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் சிறுமியை மிரட்டி கற்பழித்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள். இதுபற்றி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கற்பழித்த ஆயாஸ் அன்சாரியை கைது செய்து, போக்சோ கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தனர்.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபணமானதால் அவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆயாஸ் அன்சாரி ஏற்கனவே 5 பாலியல் குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் ஆவார்.

Next Story