பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 14 Feb 2019 10:15 PM GMT (Updated: 14 Feb 2019 7:31 PM GMT)

பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தாமரைக்குளம்,

அரியலூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்டத்தில் உள்ள தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி- வினா போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 4, 5-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு பேச்சுப்போட்டியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ஓவியம்,பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வராணி தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி பார்வையிட்டார். இப்போட்டிகளில் ஏற்கனவே வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் தேர்ச்சி பெற்ற 115 மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவில் இருந்து 3 மாணவ- மாணவிகள் தேர்ச்சி செய்யப்பட்டனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியின் நடுவர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் சிவசங்கரன், தேன்மொழி, அமராவதி, மாரிமுத்து, ஜெயவேணி, இசையமுது, செல்வமணி, செந்தமிழ்செல்வி, அங்கையற்கண்ணி, மகேஸ்வரிபாய் ஆகியோர் செயல்பட்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 

Next Story