குடும்ப தகராறில் பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை


குடும்ப தகராறில் பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Feb 2019 8:18 PM GMT (Updated: 19 Feb 2019 8:18 PM GMT)

அண்ணா நகரில் குடும்ப தகராறு காரணமாக பெண் இன்ஸ்பெக்டரின் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி, 

மாநில குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் சுசித்ராதேவி (வயது 33), இவரது கணவர் கோபிநாத் (35), சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

கணவன் மனைவி இருவரும் அண்ணா நகர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றுமுன் தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுசித்ரா தேவிக்கும், அவரது கணவருக் கும் இடையே வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதையடுத்து ஆத்திரத்துடன் அறைக்குள் சென்ற கோபிநாத் கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த சுசித்ரா தேவி கதவை திறந்து பார்த்தபோது, கோபிநாத் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் அவர் சத்தம் போட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கோபிநாத் உடலை மீட்டனர். ஆனால் அவரை சோதித்தபோது ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது.

இதுகுறித்து அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story