சிதம்பரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தச்சு தொழிலாளி தற்கொலை


சிதம்பரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தச்சு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 20 Feb 2019 10:45 PM GMT (Updated: 20 Feb 2019 9:52 PM GMT)

சிதம்பரத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

சிதம்பரம்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முள்ளங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமன் மகன் ரவி(வயது 27). தச்சுதொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு வந்துவிட்டார். பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், ரவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை சிதம்பரம் சி.கொத்தங்குடி 20 அம்ச நகர் என்ற இடத்தில் சாலையோரமாக ரவி பிணமாக கிடந்தார்.

இதுபற்றி அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவரது உடலுக்கு அருகில் மதுபாட்டிலும், விஷ பாட்டிலும் இருந்தன. இதனால் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்து அவர் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து ரவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது தம்பி சங்கர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி உடல் நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story