தஞ்சையில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு வலைவீச்சு


தஞ்சையில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 March 2019 10:15 PM GMT (Updated: 10 March 2019 7:30 PM GMT)

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை சிவாஜி நகரை சேர்ந்தவர் வெங்கட். இவருடைய மனைவி ஹேமா (வயது70). இவர் காலையில் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அதிகாலை நடைபயிற்சி செல்வதற்காக வீட்டில் இருந்து தனியாக புறப்பட்டார்.

சிவாஜி நகர் மேம்பாலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு மர்ம நபர் ஹேமாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். இதைக்கண்டு திடுக்கிட்ட அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்மநபர் நகையுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து ஹேமா தஞ்சை மேற்கு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story