குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
x
தினத்தந்தி 10 March 2019 10:15 PM GMT (Updated: 10 March 2019 8:39 PM GMT)

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள ஆரியூர் பலவாளி தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி சுகன்யா (வயது 21). இவர் களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் குழந்தை இல்லாததால் கணவன், மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுகன்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுகன்யாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தியும் விசாரணை நடத்தி வருகிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story