பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 14 March 2019 9:30 PM GMT (Updated: 14 March 2019 8:02 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* மூர்மார்க்கெட் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.05 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆவடி, அரக்கோணம், திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர் இடையே இயக்கப்படும் 24 மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர், அரக்கோணத்திலிருந்து மூர்மார்கெட் மற்றும் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் 21 மின்சார ரெயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* ஆவடி-பட்டாபிராம் சைடிங் மதியம் 1.50 மணிக்கும், மூர்மார்கெட்-அரக்கோணம் காலை 9.45 மணிக்கும், அரக்கோணம்-திருத்தணி காலை 11.55, 1.50, 2.25 மணிக்கும், திருவள்ளூர்-மூர்மார்கெட் மதியம் 1.15 மணிக்கும், ஆவடி-அரக்கோணம் காலை 11.10 மணிக்கும் சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story