நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது


நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 9:24 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை,

சென்னையில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் உத்தரவுபடி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என 750 பேரை கைது செய்துள்ளோம். சென்னையில் 450 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவின்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்.

சென்னையில் பாதுகாப்பு பணிக்காக முதல் கட்டமாக 4 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் வந்துள்ளனர். அடுத்தகட்டமாக மேலும் 16 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் வருவார்கள்.

சென்னையில் முறையாக அனுமதி பெற்று 2,700 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர். அந்த துப்பாக்கிகளை திருப்பி ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் இதுவரை 1,230 துப்பாக்கிகள் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த உடன் இந்த துப்பாக்கிகள் உரியவர்களிடம் திருப்பி கொடுக்கப்படும். தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 14 கட்சிகள் மீது 72 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பறக்கும் படையினர் சென்னை முழுவதும் இரவு, பகலாக ரோந்து சுற்றி வருகிறார்கள். பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.10 லட்சமும், 4½ கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Next Story