மங்கலம்பேட்டை அருகே, விவசாயி, விஷம் குடித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு


மங்கலம்பேட்டை அருகே, விவசாயி, விஷம் குடித்து தற்கொலை - குடும்ப தகராறில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 19 March 2019 10:25 PM GMT (Updated: 19 March 2019 10:25 PM GMT)

மங்கலம்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம், 

விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விஜயமாநகரம் புது விளாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாலமுருகன் (30), விவசாயி. இவரது மனைவி மகாலட்சுமி (வயது 25). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று பாலமுருகனுக்கும், மகாலட்சுமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பாலமுருகன், அதே பகுதியில் உள்ள தோட்டத்துக்கு கரும்பு வெட்ட சென்றபோது, அங்கு வைத்து விஷத்தை குடித்து விட்டார்.

இதில் அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story