நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள்: 2-வது நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை


நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள்: 2-வது நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை
x
தினத்தந்தி 20 March 2019 10:45 PM GMT (Updated: 20 March 2019 7:47 PM GMT)

நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்களில், 2-வது நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய 2-வது நாளான நேற்று வேட்பாளர்கள் வருவார்கள் என்று அலுவலகங்களில் தேர்தல் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட 2-வது நாளான நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரவில்லை.

Next Story