திருக்குறுங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம், விவசாயிகள் கவலை


திருக்குறுங்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம், விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 23 March 2019 10:30 PM GMT (Updated: 23 March 2019 8:27 PM GMT)

திருக்குறுங்குடி பகுதியில் கடந்த 2 மாதங்களாக நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஏர்வாடி,

திருக்குறுங்குடியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு டோக்கன் முறையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்வதில் கால தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர். இதனால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. அந்த நெல் மூட்டைகள் சாலையோரங்களில் பாதுகாப்பின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால் விவசாயிகள் கொள்முதல் நிலையத்தில் காத்து கிடக்க வேண்டியதுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கொள்முதல் நிலையத்தில் விரைந்து நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Next Story