போலீசாருக்கு பயந்து குளத்தில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி புதுக்கோட்டையில் பரபரப்பு

புதுக்கோட்டையில் போலீசாருக்கு பயந்து குளத்தில் குதித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவிற்கு பக்தர்கள் பூ தட்டுகளை கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது சில வாலிபர்கள் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் சிலர் காந்திநகர் பகுதிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அவர்கள் 2 பேரும் திருகட்டளை சாலையில் உள்ள ஒரு குளத்தில் குதித்தனர். இதில் ஒரு வாலிபர் கரையை கடந்து தப்பி சென்று விட்டார். மற்றொரு வாலிபர் நீச்சல் தெரியாததால் குளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் குளத்தில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்கள் தேடியும் வாலிபர் கிடைக்கவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சிறிய படகின் உதவியுடன் வாலிபரை தேடும் பணியில் மீண்டும் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குளத்தில் மூழ்கி இறந்தவர் புதுக்கோட்டை காந்திநகர் 8-ம் வீதியை சேர்ந்த ரெங்கராஜ் மகன் சுகு என்ற சுகுமார் (வயது 20) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுமாருடன் இருந்த மற்றொரு வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசுக்கு பயந்து வாலிபர் குளத்தில் குதித்து இறந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை காந்திநகர் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவிற்கு பக்தர்கள் பூ தட்டுகளை கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது சில வாலிபர்கள் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசார் சிலர் காந்திநகர் பகுதிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது அவர்கள் 2 பேரும் திருகட்டளை சாலையில் உள்ள ஒரு குளத்தில் குதித்தனர். இதில் ஒரு வாலிபர் கரையை கடந்து தப்பி சென்று விட்டார். மற்றொரு வாலிபர் நீச்சல் தெரியாததால் குளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் இது குறித்து புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் குளத்தில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரங்கள் தேடியும் வாலிபர் கிடைக்கவில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சிறிய படகின் உதவியுடன் வாலிபரை தேடும் பணியில் மீண்டும் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குளத்தில் மூழ்கி இறந்தவர் புதுக்கோட்டை காந்திநகர் 8-ம் வீதியை சேர்ந்த ரெங்கராஜ் மகன் சுகு என்ற சுகுமார் (வயது 20) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகுமாருடன் இருந்த மற்றொரு வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசுக்கு பயந்து வாலிபர் குளத்தில் குதித்து இறந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story