உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

கீழ்வேளூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கீழ்வேளூர்,
நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த தேர்தல் பறக்கும் படையினர் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருக்குவளை தாசில்தார் இளங்கோவன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று நாகை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
ரூ.1 லட்சம் பறிமுதல்
அப்போது நாகை பகுதியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்த வேனை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த செல்லதுரை என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி கீழ்வேளூர் தாசில்தார் கபிலனிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து செல்லதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த தேர்தல் பறக்கும் படையினர் உள்ளிட்ட பல்வேறு நிலை அலுவலர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருக்குவளை தாசில்தார் இளங்கோவன் தலைமையிலான நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று நாகை கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
ரூ.1 லட்சம் பறிமுதல்
அப்போது நாகை பகுதியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்த வேனை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த செல்லதுரை என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பணத்தை கைப்பற்றி கீழ்வேளூர் தாசில்தார் கபிலனிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து செல்லதுரையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story