ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு, மாணவியை காரில் கடத்தி சென்ற 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது


ஒட்டன்சத்திரத்தில் பரபரப்பு, மாணவியை காரில் கடத்தி சென்ற 5 பேர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 1 April 2019 10:45 PM GMT (Updated: 1 April 2019 8:40 PM GMT)

ஒட்டன்சத்திரத்தில் மாணவியை கடத்தி சென்ற 5 பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

ஒட்டன்சத்திரம், 

ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 16 வயது உடைய பள்ளி மாணவி. நேற்று அந்த மாணவி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது 2 கார்களில் 5 பேர் வந்தனர். அவர்கள் அந்த மாணவியை ஒரு காரில் கடத்தி சென்றனர். மற்றொரு கார் அதனை பின்தொடர்ந்து சென்றது.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஒட்டன்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த கார்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அந்த கார்களில் இருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அந்த மாணவியை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story