நோய் குணமாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை


நோய் குணமாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 13 April 2019 10:00 PM GMT (Updated: 13 April 2019 6:51 PM GMT)

திருப்பூர் அருகே நோய் குணமாகாததால் முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர்,

திருப்பூர் கரட்டாங்காட்டை சேர்ந்தவர் முருகசாமி(வயது 85). இவருடைய மனைவி ராமாத்தாள் (75). முருகசாமிக்கு ஆஸ்துமா நோய் இருந்து வந்துள்ளது. இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று விட்டு ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டுக்கு திரும்பியுள்ளார். மீண்டும் அவருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால், தற்கொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்று தனது மனைவியிடம் முருகசாமி கூறியுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டு திண்ணையில் இருந்த முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த ராமாத்தாள் சத்தம் போட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முருகசாமி இறந்தார்.

இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story