திருப்பத்தூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி


திருப்பத்தூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 April 2019 10:30 PM GMT (Updated: 13 April 2019 8:03 PM GMT)

திருப்பத்தூர் அருகே மானகிரி பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில், மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

திருப்பத்தூர்,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி முக்கொடியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் அய்யப்பன் (வயது 29). இவரது நண்பர் ஆனந்தன் (47). கார் டிரைவர். இவர்கள் இருவரும் வேலை விஷயமாக தேவகோட்டையிலிருந்து அறந்தாங்கிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆனந்தன் ஓட்டி வந்தார்.

இவர்கள் மானகிரி அருகே வந்த போது, அதேபகுதியை சேர்ந்த அபுதாகிர் என்பவர் தனது காரை ஓட்டி வந்தார். அப்போது, கார் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அய்யப்பன், ஆனந்தன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய கார் நிலைதடுமாறி அருகில் ரோட்டின் ஓரத்தில் சேதமாகி நின்றது. தகவலறிந்து வந்த நாச்சியாபுரம் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காரில் வந்த அபுதாகிர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்றார். இந்த விபத்து குறித்து நாச்சியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Tags :
Next Story