கோவில்பட்டியில் அரசு பொருட்காட்சி திறப்பு விழா


கோவில்பட்டியில் அரசு பொருட்காட்சி திறப்பு விழா
x
தினத்தந்தி 20 April 2019 10:00 PM GMT (Updated: 20 April 2019 6:46 PM GMT)

கோவில்பட்டியில் அரசு பொருட்காட்சி திறப்பு விழா நடந்தது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் அரசு பொருட்காட்சி திறப்பு விழா நடந்தது.

அரசு பொருட்காட்சி

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா முன்னிலை வகித்தார். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர் அரசு பொருட்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் அமுதா, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் பரமசிவன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிதா ஷெரீன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, துணை இயக்குனர்கள் சுந்தரலிங்கம், யமுனா, நகரசபை ஆணையாளர் அட்சயா, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, மாவட்ட உதவி வனபாதுகாவலர் பாலசுப்பிரமணியன், வனச்சரகர் சிவராம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்வேறு அரங்குகள்

இந்த பொருட்காட்சியில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், வனம், கால்நடை பராமரிப்பு, கைத்தறி, கூட்டுறவு, சமூக நலம், குடும்ப நலம், காவல், செய்தி மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களைச் சார்ந்த 40 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் அந்தந்த துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள், சாதனைகள் குறித்த விளக்க படங்கள், பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அவை குறித்து அந்தந்த துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். பொருட்காட்சி வளாகத்தில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ராட்சத ராட்டினங்கள், உணவகங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மகளிர் சுய உதவிக்குழுவினரின் கைவினை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து 45 நாட்கள் அரசு பொருட்காட்சி செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story