உத்திரமேரூர் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது


உத்திரமேரூர் அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது
x
தினத்தந்தி 5 May 2019 10:14 PM GMT (Updated: 5 May 2019 10:14 PM GMT)

உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்துள்ள திருப்புலிவனம் காலனியை சேர்ந்தவர் தேவன். இவரது மகன் சுரேஷ் (வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அதே தெருவை சேர்ந்த பாலாஜி (22) முன்விரோதத்தில் சுரேசை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்தவெள்ளத்தில் மயங்கினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் தன்னுடைய தந்தையை தாக்கியவர்களை பழிவாங்க அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story